காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Saturday, May 29, 2010

காதல்கதை- ஸ்ரீ

ஸ்ரீ - இது ‌ஒரு நவீன யுகத்தின் மாறுபட்ட மன போராட்ட கதை




என்னுரை
ஏதோ தோன்றிய எண்ணங்களை அப்படியே சேர்த்து தருகிறேன்.  சொல், பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்.

முன்னுரை


நவீன யுகத்தில் முகம் தெரியாத இரு உள்ளங்களுக்குள் ஏற்பட்ட காதல் அனுபவத்தை இக்கதையின் மூலம்  விவரிக்கப்பட்டுள்ளது.


‌செல்பேசிமூலம் அறிமுகம் இல்லாத ‌ஒரு பெண்ணின் எண்ணிலிருந்து வந்த ஒரு குறுச்செய்தி (SMS) தான் இவர்களின் அறிமுகம்.  அதன் பின்னர் அவர்கள் பழகியதை கதையின் நாயகன் ஆனந்த் அவளுக்கு (‌‌‌‌‌ஸ்ரீ) கடிதம் மூலம்  தெரிவிக்கி‌றான்.


காதல் கடிதம்-1




என் அன்புக்குரிய ஸ்ரீ-க்கு,


நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அதன் விளைவாக தான் வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதமிது. 


நீ முதலில் அனுப்பிய SMS முதல்  இன்று வரை நடந்தவற்றை
அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது.



உன் முதல் SMS msg சனிக்கிழமை யாரேன்று தெரியாத உன் நம்பரிலிருந்து வந்ததும், ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி,
SMS மூலம் ஒருவரை  மகிழ்ச்சி அடைய வைக்கமுடியும்
என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
 
அன்று பாறையாய் நான். பசுமரமாய் நீ.
வெடிகுன்டுக்கு பிளக்காத பாறை வேருக்கு பிளந்த அதிசயம் என்ன?
வைரமுத்து கேட்டது போல் இதில் யாருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க?
பாறைக்குள் புகுந்த வேருக்கா? இல்லை, வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?

"உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன்  பார்வையா
உன் அன்புதான் என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?" என்று ஒரு கவிஞன் கூறியது  தான் என் நினைவுக்கு வருகிறது.
நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ Office க்குபோய் file நடுவில் வாழ்ந்த என்னை. 
உன்னால்தான் மகிழ்ச்சி என்னும் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

தினமும் காலையில் கதிரவனை காண்கிறேனோ இல்லையோ,
உன் காலை வணக்கத்தை என்  Mobile ல பாக்காமல் என்னால் இருக்க முடியாது.

ஒரு நாள் இரவு நீ Record எழுதுறேன் நைட் 12 ஆகும் என்று சொன்னியே
அதுக்கு நானும் உனக்கு துணையாக  தூங்காம இருக்கிறேனு சொன்னதுக்கு
"நீ ரொம்ப நல்லவனா இருக்கிறேயேனு" நீ சொன்ன அந்த பாராட்டு,
எனக்கு ஏதோ உலகமே என்னை பாராட்டிய மாதிரி இருந்துச்சுடா

இரவுகள் முழுவதும் உன் ஞாபக கொசுக்கள்.
புரண்டு புரண்டு படுப்பேன். தூக்கமும் புரண்டு புரண்டு படுக்கும்.
உன்னைக் காண வேண்டும் என மனசு அரிக்கும்.
ஆனால் எப்படி புரியாதபடி எத்தனை இரவுகள்?

(தொடரும்..................................................)



No comments:

Post a Comment