கவியை பாட ஆசைதான்- உன்
கண்களை பார்த்ததில்லை - நான்
கண் இருந்தும் குருடன் தான்
கரும்பின் சுவைபோல் உன்
கனிவான பேச்சை கேட்டு - எத்தனை நாள்
கண் உறங்க மறந்திருப்பேன் - உன்னை
கனவில் நினைத்து மகிழ்ந்திருப்பேன்
கவிஞர் வாலியை போல்
கவிதை பாட
கற்றுக்கொண்டேன் - உன்
கைபேசி மூலம்
உன் பெயர்
எனக்கு பிடிச்சிருக்க
என் பெயருக்கு பதிலாக
உன் பெயரை
என் பெயரின்
புனை பெயராக மாற்றிக் கொண்ட
கவிபிரியன் நான்.
"மல்லி(கா)கை" என்றதும்
உனக்கும்
எனக்கும்
மட்டும் தெரியும் அந்த பொருத்தம்
குப்புசாமிக்கும்,
கோபால்-சாமிக்கும் தெரியவா போகிறது.
என் அரைசாண் இதயத்தின்
அந்தம் வரை தொட்டவளே!
ஆழமான உன் மனதை
ஆக்கிரமித்த நான்- இன்று
ஓரமாய் கிடப்பவன்!
உன் நினைவுகளை வரவேற்க
என் இதயத்தில்
அரண்மனை அமைத்து வைத்திருக்கிறேன்
நீயோ
புதைகுழி தேடிக்கொண்டிருக்கின்றாய்
என் நினைவுகளை புதைப்பதற்கு
உன் மனதை நானும்
என் மனதை நீயும்
உடுத்திக்கொண்டு
என்னில் நீயும்
உன்னில் நானும்
உறைந்துபோன
அந்த நாட்கள்
என் சவப்பெட்டியை கண்டதும் தான்
உன் நினைவுக்கு வருமா?
ஒரு கவிதையின்
கிறுக்கலில் -எல்லாவற்றையும்
கொட்டிவிட இயலாத
உணர்வின் மிகுதியில்
நனைகிறது என் மனசு.
காதல் கடந்து
வாழ்க்கை கடந்து
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து
இறக்கப் போகும் அப்பாம்மா வரை
எண்ணி அழுகிற பலரில்
என்னையும் ஒருவராய் ஏன் நீ ஏற்க மறுக்கிறாய். .
இன்னும் -
என்னென்னவோ வலிகள்
எப்படி சொல்வதென்றே தெரியாமல்
உள்ளே கனக்கிறது என் உள்ளம்.
அத்தனையையும்
வெளியில் சொன்னால் -
நான் ஒரு 'பைத்தியம்' என்றுசொல்லும் உலகம்
தனிமை கொன்று வீழ்த்தியும்
யாருடமே பேசுவதில்லை நான்.
உண்மையில் -
எனக்கான கவலையென்ன?
உணவோ
உடையோ
சுகமோ துக்கமோ என்றால் -
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.
பிறகென்ன; ஏனிந்த
பிதற்றல் என்கிறாயா............?
என் கவலைகள் மொத்தமும்
நீ - எனில்
ஏற்ப்பியா சொல்??
புரிந்துக் கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமானததுதான் நமது
நட்பு.
உனக்கு புரிந்ததா! என்றால் எனக்கு புரியவில்லை
(தொடரும்)
No comments:
Post a Comment