காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Sunday, June 13, 2010

நான் ஒரு ஜீவன்

உன் காதலை விரும்பும்  ஒரு ஜீவன்
 
நான் உன்னை நினைப்பது தான் உனக்கு தொந்தரவா
இல்லை தொந்தரவாகதான் நான் இருக்கிறேனா
நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்
நீ என்னிடம் சொன்னபடிதான் நடந்தாயா?
எனக்கு  தெரியவில்லை.
பிரிவின் விளிம்பிள் நிற்கிறேன் விருப்பம் இல்லாமல்,
 
நீ என்னை ஏதேதோ நினைக்க வைக்கிறாய்,
பழைய நினைவுகள் 
எல்லாவற்றையும் நினைக்க வைக்கிறோய்
காதல் ஒன்னும் விளையாட்டல்ல,
நான் ஒன்னும் பொம்மையல்ல

நான் ஒரு ஜீவன், 
உன் காதலை விரும்பும்  ஒரு ஜீவன்.
நான் உன்னை காதலிக்கிறேன்,
நீயும் என்னை 
காதலிப்பதாக சொன்னாய், வெறும் வாக்கியமாக,
அவை காற்றில்  கலந்த வெறும் அர்த்தமற்ற  வார்த்தையாக,

 
நான்  உன்னுடன் இருந்தால்   
உன்  அன்பை உனக்கு  புரியவைக்க முடியும், உன்னை விட்டு பிரிந்து நான் போனால்,
உன்னை
பழிவாங்குவதாக தான் நீ நினைப்பாய்,
நான் விளையாடவில்லை
நான் தவறேதும் செய்யவில்லை,
ஆனால் அதற்கும் மேலே ஏதோ செய்கிறேன்.

நான்  உனக்கு முக்கியமானவனா?
எதை என்னிடம் இருந்து நீ எதிர்பார்க்கிறாயோ
அதையே நானும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல்
உனக்கு தர விரும்புகிறேன்.
இதுவரை இது உனக்கு  புரியவில்லை என்றால்
தூங்கும் போது யோசித்து பார்.


நீ ஆச்சரியம் படுவாய்
நான் 
எங்கே போகிறேன் என்று,
ஆனால்  என்னை பார்க்க விரும்ப மாட்டாய் .
நீ  ஆச்சரியம் படுவாய் 
நான் எப்படி இருப்பேன் என்று ஆனால்,
என்னை பற்றி கவலைபடமாட்டாய்

நான்  உன் மீது அதிக  அக்கறை உள்ளவன்,
அளவுக்கு மீறி  அக்கறை உள்ளவன்,

உன்னை விட்டு பிரிந்தாலும் என்னால் மாற்றிக் கொள்ள முடியாது .
ஒரு நாள் சந்திபோம் ,
அப்போது சொல்வாய் 
"நீ  நன்றாக தான் இருக்கிறாய் என்று".
எனக்கு அது தான் வேண்டும் 
ஆனால் எனக்கு தெரியவில்லை 
நான் எப்படி இருப்பேன் என்று,
என்ன நடக்க போகிறது என்று 
சத்தியமாக தெரியவில்லை

No comments:

Post a Comment