காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Sunday, June 6, 2010

கடிதம்---4

அடிக்கடி சண்டை வரும்
நமக்குள்
ஆனால்...
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேன் நான் உன்னிடம்
உனக்கான காதலோடு

என்ன செய்கிறாய், என்ன நினனக்கிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது.

உன் எத்தனையோ நண்பர்களில் நானும் ஒருவன்,
எந்த வகையில் மற்றவர்களை விட வித்தியாசமானவன் நான்? என்று கேட்டதற்கு நீ சொன்ன பதில் நினைவிருக்கிறதா உனக்கு?
நினைவூபடுத்துகிறேன் நான்.........


"பாசம், அதிக அக்கறை, குடும்பத்தின் மீது நான் கொண்ட மதிப்பு!! உன் நலனில் நான் கொண்ட அக்கறை.... இன்னும்...... இன்னும்.........",
இது நீ சொன்னது.........


இவ்வளவு இருந்தும் ஏன் என்னை ஒதுக்குகிறாய்? புரியவில்லை........
நான் உன்னை  நேரில் பார்க்கவில்லை என்ற, இல்லை என் மீது உனக்கு நம்பிக்கை வரவில்லை ஆதனால் தானா??,
 

தேடி நீ வந்த உன்
உறவை தொடர விரும்பியதால்,

ஆரம்பம் முதல் உன்னிடம் 
எதையும் மறைக்கவில்லை.
ஆனால் நீ?

காதல் கண்களிலிருந்து ஆரம்பிப்பதில்லை கண்ணே, மனதிலிருந்து ஆரம்பிக்கும், 

உன் மனதை கேட்டுபார் அது சொல்லும் உண்மையை, 



நீ என்னை மறந்து விட்டாயா? நீ என்னை நினைக்கிறியா? ஏன் என்னை மறந்தாய்? உண்மையைச் சொல். ஜீரணிக்க முடியவில்லை கண்ணே.

என் வாழ்க்கையை மாற்றியவளே. இன்றும் மாறியது வாழ்க்கை. வாழ்வதற்கு உற்சாகம் இழந்துவிட்டேன். செயல்பட முடியவில்லை. முயற்சிக்கிறேன் ஒவ்வொரு நிமிடமும்.

நான் வித்தியாசமானவன்,
நானாக உன்னை விரும்பி,
நான் மட்டும் காதலை சொல்லி
நாளை நீ சொல்லுவாய் என்று
நானிருந்தேன் நம்பி........


நீயும் விசித்திரமானவள் தான்
யாரையும் காதலிக்கமாட்டாய் என்று சொல்லிட்டு,
உன் பிறந்தநாள் அன்று வாழ்த்து சொல்ல ‌தொலைபேசியில் வந்த என்னிடம், உன் பள்ளி நண்பன் பிரபுவை காதலிக்கிறேன் என்றும்,  என் நட்பையும் தொடர விரும்புவதாய் சொல்லி 

நிற்கதியாய் விட்டாய் என்னை...........

நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட
அந்த நாட்கள் என்று வருமோ ?

வண்ணக் கனவுகளில் எண்ணம் மறந்து,
சின்னக் குழந்தைகளாய் ஆடிக் கழித்த
அந்த வாழ்க்கை இனி வருமா?

நான் ‌எங்கே தவறு செய்தேன்?  புரியவில்லை,
என்னிடம் ‌என்ன குறை?
தெரியவில்லை,
எத்தனை முறை நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னதற்கு பதில் ஏதும் செல்லாமல் போதனதற்கு அர்த்தம்.........?????

இவ்வளவு நாட்கள் நமது பழக்கம்?????
இது போல் இன்னும் பல வினாக்கள் என் மனதில் விடை தெரியாமல்? எப்படி உனக்கு தெரிவிப்பது,
இந்த கடிதத்தை நீ படிக்கும் போது நான் நானாக இல்லை,
பல மாற்றங்களை என்னுள் ஏற்படுத்திவிட்டு
நீ போய்விட்டாய்,
 

நினைக்கவும் முடியாமல், 
மறக்கவும் முடியாமல்,
நினைவுகளளோடு

நான் படும் பாடு..........





நீ ஏன் வந்தாய்?
ஏன், போனாய்?
இடையில் நடந்தது என்ன?
இது என்ன நவீனயுகத்தின் வித்தியாசமான விளையாட்டா? உன்னிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறேன்

தொடர்பு கொள்ள வழிதேடி அலைகிறேன் கண்ணே. நீயும் தேடுகிறாயா? உள்ளத்தில் கவலை இவ்வளவு காலம் தங்கியதில்லை கண்ணே. வருடம் 1 கடந்து விட்டது. உன் மனம் எவ்வளவு தூரம் சென்று விட்டது. 
ஒரு முறை பேசடி மனம் விட்டு. 
மறுத்து விடாதே கண்ணே 

உனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.......
உன் பதில் கடிதம் எதிர்பார்த்து

காதலனாகவும்.......... நண்பனாகவும்.........


இப்படிக்கு,
என்றும் உன் அன்புள்ள,
ஆனந்த

No comments:

Post a Comment